ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுமா இந்தியா - 4 ஆம் நாள் ஆட்டம் இன்று தொடக்கம்

ind vs aus

முதல் இன்னிங்ஸில் ஆஸி. அபாரம்

ஐசிசி நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி ட்ராவிஸ் மற்றும் ஸ்மித் ஆகியோரின் அபார சத்தால்  469 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 173 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. 

அதிர்ச்சி அளித்த ஆஸி. தொடக்க ஜோடி

அதன்படி ஆட்டத்தை தொடங்கிய வார்னர்,  கவாஜா தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். இதனையடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித், லபுஷேன் ஆகியோர் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இதனிடையே ஸ்மித் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவிடம் விக்கெட்டை இழந்தார். இத்துடன் அவர் டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜாவிடம் 8-வது முறையாக விக்கெட்டை இழப்பது குறிப்பிடத்தக்கது. 


ஆதீக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள் 

இதையடுத்து களம் இறங்கிய டிராவிஸ் ஹெட் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்திருந்த நிலையில் இந்த முறை 18 ரன்களில் ஜடேஜா வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். தற்போது ஆஸ்திரேலிய அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. லபுஸ்சன் 41 ரன்களும், க்ரீன் 7 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். இந்தியா சார்பில் ஜடேஜா 2 விக்கெட்களும், சிராஜ் மற்றும் உமேஷ் தலா 1 விக்கெட்டும் எடுத்துள்ளனர். ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், 4 ஆம் நாள் ஆட்டம் இன்று தொடங்க உள்ளது. இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் ஆதீக்கத்துக்கு முடிவு கட்ட இந்திய வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.