பொன்னியின் செல்வன் - 2 ரிலீஸ் .. ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய தியேட்டர் ஓனர்கள்.!

ps2

கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை இயக்குநர் மணிரத்னம் படமாக இயக்கி தமிழர் வரலாற்றையும் தமிழ் சினிமாவையும் சிறப்பு செய்தார். இந்த படம் கடந்த ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் திரை பிரபலங்கள் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்திக், த்ரிஷா, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சரத்குமார், உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 

பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்றநிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஏங்கிப்போய் காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. படக்குழு அறிவித்ததையடுத்து, படத்தின் ப்ரொமோஷன் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களில் 'சோழர்கள் வருகிறார்கள்' என்ற வசனத்தைப்போல படத்திற்கான ப்ரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 

இந்தநிலையில், நாளை உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவலை அளித்திருக்கிறது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம். அதாவது, பொன்னியின் செல்வன்-2 நள்ளிரவு மற்றும் அதிகாலை காட்சிகளை ரத்து செய்திருக்கிறது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம். காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.