கடல் தாண்டி வந்த காதலியை கொலை செய்த காதலன்..! 

Haryana

ஹரியானா மாநிலத்தில் கடல் தாண்டி தன்னை தேடி வந்த காதலியை, காதலனே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கனடா to இந்தியா

கனடாவில் பணி செய்துகொண்டு இருந்த நீலம் என்ற இந்திய பெண் ஒருவர் தனது காதலனை சந்திப்பதற்காக, அவரது வற்புறுத்தலின் படி, கடந்த ஜூன் மாதம் இந்தியா வந்துள்ளார். பின்னர் நேரடியாக தனது காதலன் சுனிலை சந்திக்க சென்றுள்ளார். அதன்பிறகு அவர் எங்கு சென்றார் என்ன ஆனார் என்பது யாருக்கும் தெரியவில்லை. 

போலீசில் புகார்

இதனால் கடந்த ஜூன் மாதம் நீலத்தின் சகோதரி, ரோஷினி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது சகோதரி நீலம் IELTS தேர்வில் தேர்ச்சி பெற்று, கனடாவில் வேலை பார்த்து வந்ததாகவும், கடந்த ஜனவரி மாதம் சுனில் என்ற இளைஞர் அவளை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி இந்தியாவிற்கு வரவழைத்ததாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் நீலம் இந்தியாவிற்கு வந்த பிறகு அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை எனவும், அவரை உடனடியாக கண்டுபிடித்து தரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

உள்துறை அமைச்சரிடம் புகார்

ஆனால் காவல்துறையினர், இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குடும்பத்தின் புகார் தெரிவித்தனர். மேலும் தங்கள் மகள் காணமல் போன வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டுமென நீலத்தின் பெற்றோர் ஹரியானா மாநில உள்துறை அமைச்சரிடம் புகார் அளித்தனர். அதன் பிறகு வழக்கை தீவிரமாக விசாரிக்கத் தொடங்கிய போலீசார் சுனிலை கண்டுபிடித்து, கைது செய்தனர். 

நீலத்தை கொலை செய்த சுனில்

கடந்த ஜூன் மாதம் சுனிலை சந்திக்க வந்த நீலத்தை, அவர் தலையில் சுட்டுக்கொன்று 10 அடி குழித்தோண்டி புதைத்துள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரணையில், சுனில் தெரிவித்துள்ளார். பின்னர் நீலத்தின் எலும்புகளை தோண்டி எடுத்த போலீசார் அதனை உடற்கூறு ஆய்விற்காக அனுப்பியுள்ளனர். மேலும் சுனில் மீது ஏற்கெனவே ஒரு டஜன் கொலை வழக்குகள் மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தற்கான வழக்குகளும் பதியப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.