நிலத்தில் ஆடு மேய்ந்ததால் துப்பாக்கிச்சூடு.. ம.பி.யில் அதிர்ச்சி.! 

shoot

விவசாய நிலத்தில் ஆடு மேய்ந்த விவகாரத்தில் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாயத்தில் கைகலப்பு

மத்தியப்பிரதேசம் மாநிலம் தாதியா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் விவசாய நிலத்தில் ஆடு மேய்ந்த விவகாரத்தில் இரு சமூகத்தினரிடையே நேற்று( செப்-13 )மோதல் ஏற்பட்டது. தாதியா மாவட்டத்தில் உள்ள டாங்கி மற்றும் பால் சமூகத்தினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இரு சமூகத்தினருக்கிடையில் உள்ள நிலத்தகராறு பிரச்னையை தீர்த்து வைப்பதற்காக ஊர் பஞ்சாயத்தை கூட்டி இருக்கிறார்கள். 

5 பேர் உயிரிழப்பு

இந்த விவகாரத்தில் இரு சமூகத்தினருக்கிடையே சமாதானம் எட்டப்படவில்லை. பஞ்சாயத்தில் நடந்த பேச்சுவார்த்தை சிறிது நேரத்தில் வன்முறையாக மாறியது. அடுத்தடுத்த நேரத்தில் கைகலப்பு ஆனநிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவமும் அரங்கேறியிருக்கிறது. துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் சம்பவ இடத்திலேயும், ஒருவர் சிகிச்சை பலனின்றியும் மொத்தமாக 5 பேர் உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது. இரு சமூகத்தினருக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக அங்குள்ள போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.