நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார்கள்.. 3 பேர் பலி.!

website post (3)

திருச்சி அருகே இரண்டு கார்கள் ஒன்றோடொன்று மோதி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.                      

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த 6 பேர் சேலம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் அறந்தாங்கி திரும்பிக் கொண்டிருந்தனர். திருச்சி மாத்தூர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே நேற்று இரவு வந்தபோது அறந்தாங்கி நோக்கி சென்ற காரும், எதிரே காரைக்குடியில் இருந்து வந்த காரும் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதியது.

இந்த விபத்தில் இரண்டு கார்களிலும் பயணம் செய்த 11 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அறந்தாங்கி நோக்கிச் சென்ற காரில் பயணம் செய்த மகிஷா ஸ்ரீ (12), சுமதி (45), டிரைவர் கதிர் (47) ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த 3 பேர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.