நான் இரண்டு திருமணம் செய்துகொள்வேன் - காவல்நிலையத்தில் கதறிய புதுமணப்பெண் 

wedding

நான் இரண்டு திருமணம் செய்துகொள்வேன் என புதுமணப்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் கதறும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது.  

கட்டாயத்திருமணம்

ஹிமாச்சல பிரதேச மாநிலம், ஹமிபூர் என்ற இடத்தில் உள்ள காவல்நிலையத்தில் புதுமணப்பெண் ஒருவர் “நான் இரண்டு முறை திருமணம் செய்துகொள்வேன் என கத்தி கூச்சலிட்டு, காவலர்களிடம் முரண்டுபிடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. இதுகுறித்து தகவல் தெரிவித்த காவலர்கள், அந்த பெண்ணின் விருப்பம் இல்லாமல் பெற்றோர்கள் கட்டாயத்திருமணம் செய்துவைத்துவிட்டதாககவும், ஆனால் அந்த பெண் வேறு இளைஞரை காதலிப்பதாகவும் தெரிவித்தனர். 

வீடியோ வைரல்

இந்த சம்பவத்தை செய்தியாளர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு பலரும் பல விதமாக அவர்களின் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர். குறிப்பாக, சினிமாவில் மட்டும்தான் நடிகர்கள் தங்கள் மனைவி வேறு ஒருவரை விரும்புவதாக தெரிந்தால் அவருக்கு திருமணம் செய்து வைப்பார்கள் ஆனால் நிஜவாழ்க்கையில் அப்படி நிகழாது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தியாவில் மட்டும்தான் பெரும்பாலும் கட்டாயத்திருமணங்கள் நடக்கின்றன, குறிப்பாக திருமணத்தில் பெண்களுக்கு விருப்பம் இருக்கிறதா இல்லையா எனக்கூட பெற்றோர்கள் கேட்பதில்லை என தெரிவித்துள்ளனர். 

அதுமட்டும் இல்லாமல், தங்கள் மகள் வேறுவொரு இளைஞரை காதலிக்கிறார் எனத்தெரிந்தால் பெண்ணின் பெற்றோர் உடனடியாக அந்த பெண்ணுக்கு கட்டாயத்திருமணத்தை செய்துவைக்கின்றனர். இதனால் பலப் பெண்கள் தங்களுக்கு பிடிக்காத கணவனுடன் வாழ்ந்துவருகின்றனர். இதனால் பெண்களின் வாழ்க்கை முற்றிலுமாக பறிக்கப்படுகிறது எனவும் சமூகவலைத்தள வாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இரண்டாவது திருமணம்

இதனாலேயே அந்த வீடியோவில் இருக்கும் பெண், தனக்கு கட்டாயத்திருமணம் செய்து வைத்தாலும், நான் இரண்டாவதாக எனக்கு பிடித்த நபரை திருமணம் செய்துகொள்வேன் என காவல்நிலையத்தில் தனது உளக்குமுறலை கொட்டியுள்ளார்.